குன்னூரில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால் இதமான காலநிலை நிலவுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குன்னூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழையில்லாமல் வறட்சியாகக் காணப்பட்டது.
இதனால், குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது, தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் இதமான காலநிலை நிலவி வருகிறது.
குன்னூர் லேம்ஸ்ராக், டால்பின்நோஸ் பகுதிகளில் கடும் மேகமூட்டத்துடன் கூடிய சாரல் மழை பெய்வதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.