கூடலூரில் பலத்த மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கூடலூர் பகுதியில் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.

கூடலூர் பகுதியில் தொடர்ந்து பரவலாக பலத்த மழை பெய்து வருகிறது.
தென்மேற்குப் பருவமழை காலத்தின் தொடக்கத்தில் மே, ஜூன் ஆகிய மாதங்களில் மழை அளவு குறைவாக இருந்தது. ஆனால், பருவ மழைக் காலம் முடியும் நிலையில் இரவு, பகலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதேபோன்ற மழைப் பொழிவு நீடித்தால் தாழ்வான பகுதியில் வெள்ள அபாயமும், நிலச்சரிவும் ஏற்பட வாய்ப்புள்ளது. பலத்த மழை காரணமாக இப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com