குன்னூர் அருகே கோத்தகிரியில் குத்துச்சண்டை பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில், 10 முதல் 18 வயது வரையிலான இளைஞர்கள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மாநில அளவில் கலந்துகொள்ளும் தலைசிறந்த போட்டியாளர்கள் கையாளும் சில நுணுக்கமான அணுகுமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இப்பயிற்சி முகாமில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தும் வீரர்கள் மாநில, தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள் என முகாம் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.