நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தமிழக-கேரள சாலையில் மரம் விழுந்ததால் புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூரை அடுத்த கீழ் நாடுகாணி, கோரள மாநிலம் மலப்புரம் மாவட்ட எல்லையில் உள்ள மலைப் பாதையில் புதன்கிழமை காலை பலத்த மழை பெய்தது. இதில், அச்சாலையில் ராட்சத பாறைகளும், மரங்களும் விழுந்தன. இதனால், அச்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பாறைகளும், மரங்களும் அகற்றப்பட்டதை அடுத்து போக்குவரத்து சீரானது.