நீலகிரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறை சார்பில் பேரிடர் மேலாண்மை, தீத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து குழந்தைகள் காப்பகங்கள், தொடக்கப் பள்ளிகளில் தீயணைப்புத் துறையினரின் விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கோத்தகிரி நல்லாயன் குழந்தைகள் காப்பகம், ஒரசோலை, கோத்தகிரி ஆகிய இடங்களில் உள்ள அரசு, தனியார் தொடக்கப் பள்ளிகளில் பேரிடர் காலங்களில் கையாள வேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிப்பது குறித்து செயல்முறை விளக்கமளிக்கப்பட்டது.
இதில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனா, தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ராமகிருஷ்ணன், கிருஷ்ணன் குட்டி, சக்திவேல் ஆகியோர் தீத் தடுப்பு முறைகள் குறித்து செயல் விளக்கமளித்தனர்.