பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், நீலகிரி மாவட்டத்தில் 95.9 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இம்மாவட்டத்தில் 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய 8,688 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில், 96.87 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 183 பள்ளிகளில் 87 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. அதேபோல, 85 அரசுப் பள்ளிகளில் 40 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மாவட்டத்தில் கடந்த ஆண்டில் தேர்ச்சி விகிதம் 93.25 சதவீதமாக இருந்த நிலையில் நடப்பு ஆண்டில் 1.84 சதவீதம் அதிகரித்து 95.9 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிச்சையப்பா தெரிவித்துள்ளார்.