மஞ்சூர் அருகே பிக்கட்டி சிவசக்தி நகரில் வீட்டில் தனியாக இருந்த திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இரு இளைஞர்கள் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மஞ்சூர் அருகே பிக்கட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் அஜித்குமார் (20), லாரி ஓட்டுநர். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் முரளி (21), கீளினர். இவர்கள் இருவரும் குடிபோதையில், அதே பகுதியில் வசிக்கும் திருமணமான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். அப்பகுதி பொது மக்கள் இந்த இரு இளைஞர்களையும் பிடித்து, தர்ம அடி கொடுத்தனர். மஞ்சூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இரு இளைஞர்களையும் கைது செய்தனர்.