நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை பரவலாக மழை பெய்தது.
உதகை, குன்னூர், கோத்தகிரி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், உதகை, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை மதியம் பரவலாக மழை பெய்தது. மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். மழையுடன் குளிர்ந்த காற்றும் வீசியது.