கூடலூர் அருகே மூன்று மாநிலங்களின் வன எல்லையிலுள்ள பழங்குடி கிராமக் குழந்தைகளுக்கு காவல் துறை சார்பில் வியாழக்கிழமை பல்வேறு உதவிகள் செய்யப்பட்டன.
நீலகிரி மாவட்ட எஸ்.பி.முரளி ரம்பா உத்தரவின்பேரில் காவல் துறை சார்பில் வனப் பகுதியில் வாழும் பழங்குடி மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலன் வனப் பகுதிகள் இணையும் இடத்தில் உள்ள கூவக்கொல்லி பழங்குடி கிராமத்தில்
இந்த ஆண்டு பள்ளிக்குச் செல்லவிருக்கும் குழந்தைகளுக்கு புத்தகப் பை உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு மசினகுடி தனிப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் விஜயன் தலைமை வகித்து குழந்தைகளுக்கு பொருள்களை வழங்கினார். நக்ஸல் தடுப்புப் பிரிவு காவலர் மகேஷ், ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.