பழங்குடிகள் தினத்தை முன்னிட்டு கோழிக்கொல்லி உண்டு உறைவிடப் பள்ளியில் கலாசார கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இயங்கும் கோழிக்கொல்லி உண்டு உறைவிடப் பள்ளியில் பழங்குடி மக்களின் கலை, கலாசாரத்தை நினைவுபடுத்தும் விதமாக மாணவர்களின் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பழங்குடி மக்கள் பயன்படுத்தும் பாரம்பரியப் பொருள்கள், மூலிகைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியை அக்காடு ஆதிவாசி சங்க நிறுவனர் ஸ்டானி தெக்கேக்கரா துவக்கி வைத்தார். பள்ளி நிர்வாக இயக்குநர் ராம்தாஸ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் முருகேசன், மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ், ஆதிவாசி முன்னேற்ற சங்கத் தலைவர் விஸ்வபாரதி மற்றும் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.