கூடலூரில் நிலப் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் நிலப் பிரச்னையில் வருவாய்த் துறை, காவல் துறை மற்றும் வனத் துறை அலுவலர்களின் செயல்களுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
பிரிவு-17 நிலங்களுக்கு பட்டா வழங்கவேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் மின் இணைப்பு வழங்கியது போல தற்போதும் வழங்க வேண்டும்.
ஓவேலி பகுதியில் வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி, சமக, மற்றும் பொதுநல அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.