11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 187 பேர் எழுதவில்லை

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வை 187 மாணவ, மாணவியர் எழுதவில்லை. 

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வை 187 மாணவ, மாணவியர் எழுதவில்லை. 
 மாவட்டத்தில் உள்ள 37 தேர்வு மையங்களில்  தகுதியான 7,538 மாணவ, மாணவியரில் 7,351 பேர் மட்டும் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதினர். 187 பேர் எழுதவில்லை. 
அதேபோல,  தனித் தேர்வர்களில்  தகுதியான 74 பேரில் 72 பேர் தேர்வு எழுதினர். 2 பேர் எழுதவில்லை. மாற்றுத் திறனாளி மாணவர்களைப் பொருத்தவரை அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று 14 பேர் தேர்வு எழுதினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com