நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஆங்கிலம் முதல் தாள் தேர்வை 187 மாணவ, மாணவியர் எழுதவில்லை.
மாவட்டத்தில் உள்ள 37 தேர்வு மையங்களில் தகுதியான 7,538 மாணவ, மாணவியரில் 7,351 பேர் மட்டும் ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எழுதினர். 187 பேர் எழுதவில்லை.
அதேபோல, தனித் தேர்வர்களில் தகுதியான 74 பேரில் 72 பேர் தேர்வு எழுதினர். 2 பேர் எழுதவில்லை. மாற்றுத் திறனாளி மாணவர்களைப் பொருத்தவரை அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும் சலுகைகளைப் பெற்று 14 பேர் தேர்வு எழுதினர்.