கூடலூர் கல்லூரியில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூடலூர், கோழிப்பாலம் பகுதியிலுள்ள பாரதியார் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியும் காசிகா ஐ.ஏ.எஸ். அகாதமியும் இணைந்து நடத்திய ஒரு நாள் விழிப்புணர்வுக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்து விழா பேருரையாற்றினார்.
தேவாலா டி.எஸ்.பி. சக்திவேல் சிறுப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். கோட்டாட்சியர் முருகையன், கல்லூரி முதல்வர் டி.பழனிசாமி மற்றும் பயிற்றுனர்கள் இதில் கலந்துகொண்டனர்.