உதகை
நீலகிரி மின்பகிர்மான வட்டம், உதகை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை(நவம்பர் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: உதகை நகரம், பிங்கர்போஸ்ட், காந்தல், தமிழகம், ஹில்பங்க், கோடப்பமந்து, முள்ளிக்கொரை, சேரிங்கிராஸ், பாம்பேகேசில், கேத்தி, நொண்டிமேடு, தலையாட்டுமந்து, இத்தலார், எம்.பாலடா.