திருப்பூர் செங்கப்பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 278 பேருக்கு ரூ. 38.44 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
இவ்விழாவுக்கு ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி தலைமை வகித்தார். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் 278 பேருக்கு ரூ. 38.44 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் எஸ். பிரசன்ன ராமசாமி, திருப்பூர் சார் ஆட்சியர் ஷர்வண் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.