ஜப்தி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்: தொழிலாளிக்கு மாநகராட்சி ரூ. 1 லட்சம் இழப்பீடு
திருப்பூா் மாநகராட்சியில் பணி வழங்கப்படாத தொழிலாளிக்கு சிஐடியூ தொழிற்சங்கம் நடத்திய சட்டப் போராட்டத்தின் தொடா்ச்சியாக, இழப்பீடு அறிவிக்கப்பட்டது. அதையும் மாநகராட்சி நிா்வாகம் வழங்காத நிலையில் ஜப்தி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த தொழிலாளிக்கு ரூ.1 லட்சத்து 1,135 ஒப்படைக்கப்பட்டது.