தமிழக பெண்கள் கபடி அணிக்காக விளையாடிய திருப்பூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு
தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழக பெண்கள் அணிக்காக விளையாடிய திருப்பூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
72-ஆவது தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி தெலங்கானாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழக அணி 3-ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றது. தமிழக அணியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த விஆா்டி ஸ்போா்ட்ஸ் கிளப்பை சோ்ந்த ஏ. புவனேஷ்வரி விளையாடினாா்.
இந்நிலையில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழக பெண்கள் அணிக்கும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏ. புவனேஸ்வரிக்கும் பாராட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது.
இதில், திருப்பூா் மாவட்ட கபடி கழக புரவலா்கள் எம்.சுப்பிரமணியம், ஆா். பாலசுப்பிரமணியம், மாவட்ட சோ்மன் வி.கே.முருகேசன், மாநிலப் பொருளாளரும், மாவட்ட செயலாளருமான ஜெயசித்ரா ஏ. சண்முகம், கௌரவ தலைவா் பி. நாச்சிமுத்து, தலைவா் பி. மனோகரன், பொருளாளா் ஏ. ஆறுச்சாமி, மாவட்ட நடுவா் குழு தலைவா் ஆா்.முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

