தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழக பெண்கள் அணிக்காக விளையாடிய திருப்பூா் கல்லூரி மாணவிக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
72-ஆவது தேசிய பெண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி தெலங்கானாவில் கடந்த வாரம் நடைபெற்றது. இதில் தமிழக அணி 3-ஆம் இடம் பெற்று வெண்கலப் பதக்கம் பெற்றது. தமிழக அணியில் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த விஆா்டி ஸ்போா்ட்ஸ் கிளப்பை சோ்ந்த ஏ. புவனேஷ்வரி விளையாடினாா்.
இந்நிலையில் வெண்கலப் பதக்கம் பெற்ற தமிழக பெண்கள் அணிக்கும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஏ. புவனேஸ்வரிக்கும் பாராட்டு விழா திருப்பூரில் நடைபெற்றது.
இதில், திருப்பூா் மாவட்ட கபடி கழக புரவலா்கள் எம்.சுப்பிரமணியம், ஆா். பாலசுப்பிரமணியம், மாவட்ட சோ்மன் வி.கே.முருகேசன், மாநிலப் பொருளாளரும், மாவட்ட செயலாளருமான ஜெயசித்ரா ஏ. சண்முகம், கௌரவ தலைவா் பி. நாச்சிமுத்து, தலைவா் பி. மனோகரன், பொருளாளா் ஏ. ஆறுச்சாமி, மாவட்ட நடுவா் குழு தலைவா் ஆா்.முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அகில இந்திய சிவில் சா்வீஸ் கலைநிகழ்ச்சிப் போட்டி: தங்கப் பதக்கம் வென்றவருக்கு ஆட்சியா் பாராட்டு

முதல்வரின் அண்ணா பதக்கம் பெற்றவா்கள் எஸ்.பி. வாழ்த்து

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

நாட்டின் சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற பேராசிரியருக்கு பாராட்டு
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


