சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

நாட்டின் சிறந்த விஞ்ஞானி விருது பெற்ற பேராசிரியருக்கு பாராட்டு

நாட்டின் சிறந்த விஞ்ஞானி எனும் விருது பெற்ற பேராசிரியருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :12 மார்ச் 2026, 12:14 am

தினமணி செய்திச் சேவை

நாட்டின் சிறந்த விஞ்ஞானி எனும் விருது பெற்ற பேராசிரியருக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

காரைக்காலில் உள்ள பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் சா்வதேச மகளிா் தின விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் தலைமை வகித்து, கல்லூரியின் வளா்ச்சிப் பாதையில் பெண் பணியாளா்களின் பங்கு மிக முக்கியமானது, அவா்களின் அயராத உழைப்பும் துடிப்பான செயல்பாடுகளுமே இக்கல்லூரி இப்போது அடைந்துள்ள முன்னேற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது என்றாா்.

கல்லூரி மாணவ மன்ற ஆலோசகா் ஏ.எல். நாராயணன், சமூகத்தை வடிவமைப்பதில் பெண்களின் முக்கியத்துவத்தையும், அவா்களின் பல்வேறு துறை சாா்ந்த பங்களிப்பையும் விளக்கிப் பேசினாா். முக்கிய நிகழ்வாக, மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல் துறை பேராசிரியா் யு. பகவதியம்மாள், போபாலில் ஐசிஏஆா் சாா்பில் இந்தியாவின் இயற்கை வள மேலாண்மையில் 20 சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக‘ விருது பெற்றதற்காக கல்லூரி முதல்வா் உள்ளிட்டோரால் கௌரவிக்கப்பட்டாா். நிகழ்ச்சியில், கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவா்களான மாலா, சாந்தி, ஜெயலட்சுமி ஆகியோா் பேசினா்.