ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

உழைப்புக்கான பலன் மே 4-ல் கிடைக்கும்: முதல்வர் ஸ்டாலின்

மே நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியது குறித்து...

stalin

மே நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின். - படம்: video clip

Published On :

உழைப்புக்கான பலன் மே 4 ஆம் தேதி கிடைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர் நாளையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை மே தின பூங்காவில் உள்ள நினைவுத் தூணில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

”இந்தியாவிலேயே முதன்முதலாக சென்னையில்தான் மே தினம் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

கட்சித் தொண்டர்களின் கடின உழைப்பிற்கான வெகுமதி மே 4 ஆம் தேதி அவர்களுக்குக் கிடைக்கும், அதில் எவ்விதச் சிறு மாற்றமும் இருக்காது ”என்று அவர் தெரிவித்தார்.

கட்சித் தொண்டர்களின் உழைப்பைத் தாம் நன்கு உணர்ந்திருப்பதாகக் கூறிய அவர், ”கலைஞர், மே நாளை ஊதியத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்கும் சட்டத்தை - தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த நாட்டிற்கே பொருந்தும் வகையில் இயற்றினார்” என்று தெரிவித்தார்.

”வரும் நாள்களில் மக்கள் தேர்தல் முடிவுகளை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் வேளையில், அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களுக்குள் ஒரு நற்செய்தி வந்து சேரும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அனைவருக்கும் உள்ளடக்கிய, சமத்துவமான நல்லாட்சியைத் தற்போதைய அரசு தொடர்ந்து வழங்கி வருவதாகவும், இப்பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

Summary

Chief Minister Stalin has stated that the fruits of hard work will be reaped on May 4th.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.