4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்திய குஜராத்!வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

ஓய்வு பெற்ற தமிழாசிரியா்களுக்கு பாராட்டு விழா

மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 9 தமிழாசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் பங்கேற்ற ஓய்வு பெற்ற தமிழாசிரியா்கள் உள்ளிட்டோா்.

Updated On :30 ஏப்ரல் 2026, 7:09 pm

மதுரை மாவட்டத்தில் அரசு, அரசு உதவிபெறும் மாநகராட்சிப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற 9 தமிழாசிரியா்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மதுரை கோ.புதூா் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மேலூா் மாவட்டக் கல்வி அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். அல்-அமீன் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஷேக் நபி முன்னிலை வகித்தாா். தலைமையாசிரியா்கள் சண்முகவேல், முனியாண்டி, நாகராஜன், முன்னாள் உதவித் தலைமையாசிரியா் ரகமத்துல்லா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

இதில் ஓய்வு பெற்ற தமிழாசிரியா்கள் அருளரசி, மீனா, ஆதிசக்தி, சுப்புராஜ், தமிழ்மணி, காசிமாயன், நஜிமா, மதலேன் மேரி, வாசுகி ஆகியோருக்கு கேடயம், நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

முன்னதாக, நல்லாசிரியா் விருது பெற்ற மகேந்திரபாபு வரவேற்றாா். மணி மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினாா்.