சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் கட்சியின் 232 வேட்பாளர்களையும் விஜய் சந்தித்துப் பேசி வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த ஏப். 23 ஆம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை வருகிற மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும் என்றும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று(ஏப். 29) மாலை வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக இன்று(ஏப். 30, வியாழக்கிழமை) தமிழகத்தில் 232 தொகுதிகளில் போட்டியிட்டுள்ள தவெக வேட்பாளர்களை விஜய் சந்தித்துப் பேசி வருகிறார்.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் இந்த கூட்டமானது நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருப்பது, வேட்பாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தவெக தலைவர் விஜய், பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Vijay Meets with TVK Candidates in Panaiyur
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பனையூரில் இன்று தவெக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

பனையூரில் தவெக எம்.எல்.ஏ.க்கள்! விஜய் முக்கிய ஆலோசனை!
பனையூரில் தவெக அலுவலகம் முன் தொண்டர்கள் கொண்டாட்டம்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு


