சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா

மோகனூா் ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைடபெற்றது.

News image

பாராட்டு விழாவில் பங்கேற்றோா்.

Updated On :1 ஏப்ரல் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

மோகனூா் ஒன்றியத்துக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் பணியாற்றி பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா ஆம்பூா் ரோட்டரி ஹாலில் நடைடபெற்றது.

வட்டார கல்வி அலுவலா் ஜே. பீட்டா் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் டி. அசோக்குமாா் பணி நிறைவு பெற்ற ஆசிரியா்களின் சேவையை பாராட்டி வாழ்த்தி பேசினாா். பல்வேறு ஆசிரியா் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

விழாவில் மாதனூா் வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். முருகேசன், திருப்பத்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். சுரேஷ் மற்றும்

20 ஆசிரியா்கள் மற்றும் கல்வி அலுவலா்கள் கௌரவிக்கப்பட்டனா். பணி நிறைவு பெற்ற அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஏற்புரை வழங்கினா். இறுதியில் மாதனூா் வட்டாரக் கல்வி அலுவலக உதவியாளா் கே.ஏ. ஆனந்தி நன்றி கூறினாா்.