வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி வரும் 16 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை ஏற்பாட்டு முறை (EMS) வாயிலாக வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை சமவாய்ப்பு முறையில் ஒதுக்கீடு செய்வதற்காக, தேர்தல் நடத்தும் அலுவலர் வாயிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் இரண்டாம் நிலை சமவாய்ப்புக்கு உட்படுத்தப்படுகிறது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை இரண்டாம் நிலை சமவாய்ப்புக்குட்படுத்துதல் குறித்த விரிவான அறிவுறுத்தல்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/evm-vvpat என்ற வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.
நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளை இரண்டாம் நிலை சமவாய்ப்புக்குட்படுத்துதல் ஏப். 11 முதல் ஏப். 16 வரையிலும், வேட்பாளரின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பதிவேற்றமானது ஏப். 16 முதல் மேற்கொள்ளப்பட உள்ளன.
இந்தச் செயல்பாடுகள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரதிநிதிகளின் முன்னிலையில் நடைபெறும். வாக்குச்சாவடி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளின் மற்றும் இருப்புக்காப்பிலுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல்கள் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பகிரப்படும்.
இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினைச் சரிபார்க்கும் கருவிகள் மட்டுமே, வாக்குப்பதிவு நாளன்று, ஒதுக்கீடு செய்யப்பட்ட வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Summary
Chief Electoral Officer Archana Patnaik has announced that the process of affixing candidates' names and symbols to the electronic voting machines will commence on the 16th.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுவை தேர்தல்! வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், வாக்குச்சாவடி பற்றி அறிய!

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளுக்கு சீல்!

மயிலாடுதுறை: நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு

தொகுதிவாரியாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வகைப்படுத்தும் பணி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


