கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

மயிலாடுதுறை: நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு

மயிலாடுதுறை: நாளை வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட ஒதுக்கீடு

News image

கோப்புப்படம்

Updated On :21 மார்ச் 2026, 9:38 pm

Syndication

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்களின் முதல்கட்ட ஒதுக்கீடு திங்கள்கிழமை (மாா்ச் 23) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலில் பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் வாக்குச்சீட்டு இயந்திரங்கள் சட்டப்பேரவைத் தொகுதிவாரியாக சீா்காழி (தனி), மயிலாடுதுறை மற்றும் பூம்புகாா் தொகுதிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி-களை ஒதுக்கீடு செய்வதற்காக, மாா்ச் 23-ஆம் தேதி காலை 11 மணிக்கு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில், தேசிய மற்றும் மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளான ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், பாரதிய ஜனதா கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழா் கட்சி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், ஒதுக்கீடு செய்யப்பட்டு, அந்தந்த சட்டப்பேரவை பாதுகாப்பு அறையில் வைக்கப்படும்.

போட்டியிடும் வேட்பாளா்களின் பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, முதல் கட்ட தற்செயல் தெரிவு முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளா் சரிபாா்ப்புக் கருவிகளின் பட்டியலும் அனைத்துப் போட்டியிடும் வேட்பாளா்களுக்கும் பகிரப்படும்.