ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

திமுகவில் ஊழலுக்காக பதவி ராஜிநாமா! மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல்!

மதுரை பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து...

News image

மதுரையில் பிரசாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி - யூடியூப் / அதிமுக

Updated On :14 ஏப்ரல் 2026, 4:43 pm

மதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்து பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 14) விமர்சித்தார்.

அதிமுக ஆட்சி அமைந்ததும், நிர்வாகத்தில் தவறு, ஊழல் செய்த ஒவ்வொரு திமுக அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிபடத் தெரிவித்தார்.

மதுரையில் அதிமுக வேட்பாளர் ஆர்.பி. உதயகுமாரை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 14) பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

''மாநகரத் தலைவர்கள் ஊழலுக்காக பதவியை ராஜிநாமா செய்தனர். இப்படிப்பட்ட திமுக அரசு தேவையா? தவறு செய்த ஒவ்வொரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அதிமுக. ஏராளமான வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்காக கொடுத்துள்ளோம். வேலைக்கு வராத ஆசிரியருக்கு முழு ஊதியமா? என கேட்டவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

மக்களுக்கான நல்ல திட்டங்களை கொடுத்தது அதிமுக அரசு. அதனால்தான், எங்களையும் எங்கள் கூட்டணியையும் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதிமுக ஆட்சியில் கேட்டதையெல்லாம் மத்திய அரசு கொடுத்தது.

முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுகிறார். அவரின் நிலை பரிதாபமாக உள்ளது. அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும்.

திமுகவை பொறுத்தவரை குடும்பம் செழிக்க திட்டங்களை வகுத்து வருகிறது. மக்களுக்கான திட்டங்களை வகுத்தது அதிமுக. நமக்காக வாழ்ந்து மறைந்த தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா.

அவர்களின் தலைவர் கலைஞர் கருணாநிதி குடும்பத்துக்காக வாழ்ந்தார். இதுதான் இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம்.

அதிமுகவை உடைக்க எத்தனையோ முயற்சிகள் நடந்தன. அதிமுக புதுப்பொலிவுடன் தேர்தலை சந்திக்கிறது. இனி யாராலும் அதிமுகவை அசைக்க முடியாது. இது இயற்கையான கூட்டணி. அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்.

அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட பள்ளிகளை திமுக ஆட்சியில் மூடினார்கள். கரோனா காலகட்டத்தில் கூட மக்கள் பாதிக்கப்படக் கூடாது என செயல்பட்டது அதிமுக. ஆனால், எந்தவித பேரிடரும் இல்லாதபோது கூட குடிநீர் வரி, வீட்டு வரி, மின் கட்டண உயர்வு என வரிகளை திமுக அரசு உயர்த்தி வருகிறது. இந்த நிலை அதிமுக ஆட்சியில் மாறும்'' என எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Summary

Resignation from DMK over Corruption ₹200 Crore Scam in Madurai Corporation edappadi palanisami campaign

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.