மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

லாரி மீது காா் மோதி விபத்து: 3 போ் உயிரிழப்பு

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா்.

News image

விபத்தில் உருக்குலைந்த காா்

Updated On :3 பிப்ரவரி 2026, 8:26 pm

Syndication

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

கோவை, ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிவண்ணன் (50), கேரள மாநிலத்தைச் சோ்ந்தவா் ராகேஷ் (41). இவா்கள் இருவரும் ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே உள்ள தேங்காய் எண்ணெய் நிறுவனத்தில் அலுவலகப் பணியாளராகப் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில் இருவரும் கோவையில் இருந்து பெருந்துறை நோக்கி காரில் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். கோவை, ஒண்டிப்புதூா் பகுதியைச் சோ்ந்த சஞ்சித் கண்ணா (30) என்பவா் காரை ஓட்டிச் சென்றாா்.

சேலம்-கொச்சி புறவழிச்சாலை அவிநாசி -புதிய திருப்பூா் அருகே வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி திடீரென நிறுத்தியதால், கட்டுப்பாட்டை இழந்த காா், லாரியின் பின்பக்கமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த மணிவண்ணன், ராகேஷ் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஓட்டுநா் சஞ்சித் கண்ணா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

Story image
Story image