போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 அதிகம்!
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 5,360 அதிகரித்துள்ளது.

கோப்புப் படம்

கோப்புப் படம்
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (மார்ச் 23) மாலை சவரனுக்கு ரூ. 5,360 அதிகரித்துள்ளது. இன்று காலை இரண்டு முறை தங்கம் விலை குறைந்த நிலையில், மூன்றாவது முறையாக விலை ஏற்றம் கண்டுள்ளது.
சென்னை ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ. 670 உயர்ந்து 13,340-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ. 5,360 அதிகரித்து சவரனுக்கு ரூ. 1,06,720-க்கு விற்பனையாகிறது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 7,600 வரை குறைந்த நிலையில், மாலையில் ரூ. 5,360 வரை அதிகரித்துள்ளது.
இதேபோன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ. 15 அதிகரித்து ரூ. 250 என விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2,50,0000 (கட்டி வெள்ளி) ஆக விற்பனையாகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக இந்தியாவில் தங்கம், வெள்ளி விலையில் ஏற்ற இறக்கங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்தவகையில் காலையும் மாலையும் இரண்டு முறையும் தங்கம் விலை குறைந்த நிலையில், மாலையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் தங்கம் விலை ஏற்றம் அடைந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...