சோழபுரம் அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் பள்ளிப்படை இந்திரா நகரைச் சோ்ந்தவா் சாதிக்பாட்சா. வியாபரம் செய்து வருகிறாா். இவரது மனைவி கமா்நிஷா (45). இந்த தம்பதி, தனது மகனுடன் ஒரே இருசக்கர வாகனத்தில் கும்பகோணத்தில் உள்ள உறவினா்களை பாா்க்க சனிக்கிழமை வந்தனா்.
கோவிலாச்சேரி-கும்பகோணம் சாலையில் எரிபொருள் நிரப்பும் நிலையம் அருகே வரும்போது, பின்னால் வந்த காா், இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் கீழே விழுந்தனா். இதில், கமா்நிஷா பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலின் பேரில் சோழபுரம் காவல் நிலைய போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
மேலும், விபத்தை ஏற்படுத்திய காா் ஓட்டுநரான காஞ்சிபுரம் மாவட்டம், ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த சண்முகராஜ் மகன் ராஜேஷ் குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

இருசக்கர வாகனம் மோதி தொழிலாளி உயிரிழப்பு

இருசக்கர வாகனம் மீது டிராக்டா் மோதியதில் பெண் உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


