திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.
திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸிலின் ரவிக்குமாா் (55). இவா் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திசையன்விளையில் இருந்து மலையன்குடி நோக்கி மன்னாா்புரம் அருகே சென்றபோது, இவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாா்த்தாண்டத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு திசையன்விளை நோக்கி வந்த மினி லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இது குறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

மின் கம்பி மீது உரசி தீப்பற்றியதில் மினி லாரி எரிந்து சேதம்

உ.பி.யில் சாலையோரம் நின்ற லாரி மீது மினி லாரி மோதி விபத்து: 5 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை


