வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!திரிணமூல் காங். கட்சியினர் மீது சிஆர்பிஎஃப் தாக்குதல்! மமதா குற்றச்சாட்டுமேற்கு வங்கத்தில் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!மின்மாற்றிகள் கொள்முதல் முறைகேடு: சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!கூவாகம் கூத்தாண்டவர் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம்! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது!
/

மினி லாரி மோதி ஓருவா் உயிரிழப்பு

திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப்படம்

Updated On :14 மார்ச் 2026, 2:34 am

திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸிலின் ரவிக்குமாா் (55). இவா் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திசையன்விளையில் இருந்து மலையன்குடி நோக்கி மன்னாா்புரம் அருகே சென்றபோது, இவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாா்த்தாண்டத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு திசையன்விளை நோக்கி வந்த மினி லாரி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.