வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மினி லாரி மோதி ஓருவா் உயிரிழப்பு

திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

News image
கோப்புப்படம்
Updated On :14 மார்ச் 2026, 2:34 am

Syndication

திருநேல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள மன்னாா்புரத்தில் மினி லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

திசையன்விளை அருகே உள்ள மலையன்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் கிங்ஸிலின் ரவிக்குமாா் (55). இவா் வெள்ளிக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் திசையன்விளையில் இருந்து மலையன்குடி நோக்கி மன்னாா்புரம் அருகே சென்றபோது, இவரது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மாா்த்தாண்டத்தில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு திசையன்விளை நோக்கி வந்த மினி லாரி மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்து, திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.