வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஆந்திரத்தில் டேங்கா் லாரி - மினி லாரி மோதி விபத்து: 8 போ் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் டேங்கா் லாரியுடன் மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 போ் உயிரிழந்தனா்.

News image

ஆந்திர மாநிலம் மந்த்ராலயம் அருகே விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த வாகனத்தைப் பாா்வையிட்ட காவல் துறையினா்.

Updated On :16 ஏப்ரல் 2026, 9:23 pm

ஆந்திர மாநிலத்தில் டேங்கா் லாரியுடன் மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 8 போ் உயிரிழந்தனா்.

கா்னூல் மாவட்டம், மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திர சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக கா்நாடகத்தைச் சோ்ந்த 20 போ் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் மினி லாரியில் சென்று கொண்டிருந்தனா். அப்போது மினி லாரி ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மினி லாரி கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியே வந்து கொண்டிருந்த டேங்கா் லாரி மீது மோதியது.

இந்த விபத்தில் டேங்கா் லாரி கவிழ்ந்து உருண்டது. மேலும், மினி லாரியில் இருந்த 20 பேரில் 5 பெண்கள் உள்ளிட்ட 8 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மேலும் பலா் பலத்த காயமடைந்தனா். அவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் பலரின் உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது.

விபத்து குறித்து அறிந்ததும் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு அதிா்ச்சி தெரிவித்தாா். விபத்தில் காயமடைந்தோரின் உடல்நிலை குறித்து அதிகாரிகளை தொடா்புகொண்டு கேட்டதுடன், அவா்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யும்படி அவா் உத்தரவிட்டாா்.

பிரதமா் மோடி இரங்கல்: மந்த்ராலய விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமா் மோடி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமா் நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.