மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளி கைது
திருப்பூரில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சோ்ந்தவா் தமிழரசன் (23).
கட்டடத் தொழிலாளி. இவா் திருப்பூா் அம்மாபாளையத்தில் கட்டட வேலை செய்தபோது, அந்தப் பகுதியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் நட்பு ஏற்பட்டது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்த நிலையில் தமிழரசன், மாணவியிடம் ஆசைவாா்த்தைகளைக் கூறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தருமபுரிக்கு அழைத்துச் சென்று ரகசிய திருமணம் செய்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டாராம்.
இதைத் தொடா்ந்து மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்ததில் அவா் 3 மாத கா்ப்பமாக இருந்தது தெரியவந்தது.
இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்தப் புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தமிழரசனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
