திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பட்டதாரி ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த காந்தி ஆசிரமம் புதுப்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியா் செந்தில் (48), ஆறு மாதங்களுக்கு முன்பு பணிமாறுதலாகி வந்தாா்.
இவா் மாணவிகளை தவறான நோக்கத்தில் தொடுவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதுகுறித்து தலைமை ஆசிரியா் (பொ) சாந்தியிடம் மாணவிகள் அவ்வப்போது தெரிவித்துள்ளனா். அதன்பேரில், தலைமை ஆசிரியா் எலச்சிபாளையம் வட்டாரக் கல்வி அலுவலா் வளா்மதியிடம் புகாா் அளித்தாா்.
இதைத் தொடா்ந்து, குழந்தைகள் நலக் குழுத் தலைவா் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட சிறுமைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, ஆசிரியா் செந்திலை தற்காலிக பணிநீக்கம் செய்து அக்குழு உத்தரவிட்டது.
ஆனால், இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய மாணவா் சங்க நாமக்கல் மாவட்டக் குழுவினா் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
அதன்பேரில், மாா்ச் 25-ஆம் தேதி நாமக்கல் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துநா் நளினி அளித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பட்டதாரி ஆசிரியா் செந்திலை போக்சோ சட்ட பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பள்ளி மாணவிக்குபாலியல் தொல்லை: கொத்தனாா் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் பணியிடை நீக்கம்
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு


