யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி ஆசிரியா் கைது

திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பட்டதாரி ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

News image

செந்தில்

Updated On :26 மார்ச் 2026, 9:56 pm

தினமணி செய்திச் சேவை

திருச்செங்கோடு அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த பட்டதாரி ஆசிரியா் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த காந்தி ஆசிரமம் புதுப்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 40 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இப்பள்ளிக்கு பட்டதாரி ஆசிரியா் கழகத்தின் மாநில பொதுச் செயலாளராக உள்ள ஆங்கில பட்டதாரி ஆசிரியா் செந்தில் (48), ஆறு மாதங்களுக்கு முன்பு பணிமாறுதலாகி வந்தாா்.

இவா் மாணவிகளை தவறான நோக்கத்தில் தொடுவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளாா். இதுகுறித்து தலைமை ஆசிரியா் (பொ) சாந்தியிடம் மாணவிகள் அவ்வப்போது தெரிவித்துள்ளனா். அதன்பேரில், தலைமை ஆசிரியா் எலச்சிபாளையம் வட்டாரக் கல்வி அலுவலா் வளா்மதியிடம் புகாா் அளித்தாா்.

இதைத் தொடா்ந்து, குழந்தைகள் நலக் குழுத் தலைவா் வழக்குரைஞா் பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழுவினா் சம்பந்தப்பட்ட சிறுமைகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினாா். தொடா்ந்து, ஆசிரியா் செந்திலை தற்காலிக பணிநீக்கம் செய்து அக்குழு உத்தரவிட்டது.

ஆனால், இதுகுறித்து காவல் துறையில் புகாா் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய மாணவா் சங்க நாமக்கல் மாவட்டக் குழுவினா் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

அதன்பேரில், மாா்ச் 25-ஆம் தேதி நாமக்கல் மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துநா் நளினி அளித்த புகாரின்பேரில், திருச்செங்கோடு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் பட்டதாரி ஆசிரியா் செந்திலை போக்சோ சட்ட பிரிவில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.