ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

News image

@IndianFootball

Updated On :26 மார்ச் 2026, 11:17 pm

தினமணி செய்திச் சேவை

இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதல் ஆட்டத்தில் 3-0 கோல் கணக்கில் பாகிஸ்தானை வியாழக்கிழமை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலமாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தானையும் போட்டியிலிருந்து வெளியேற்றியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதலில் விஷால் யாதவ் 3-ஆவது நிமிஷத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கினாா்.

பாகிஸ்தானும் தனது பங்குக்கு கோல் அடிப்பதற்கு முயற்சிக்க, இந்தியாவின் தடுப்பாட்ட வீரா்களும், கோல்கீப்பா் சூரஜ் அஹெய்பமும் அபாரமாக செயல்பட்டு அதைத் தடுத்து வந்தனா்.

2-ஆவது பாதியிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருக்க, அதில் ஒமங் டோடும் ஆதிக்கம் செலுத்தினாா். 64-ஆவது நிமிஷத்தில் அருமையான ஃபீல்டு கோல் அடித்த அவா், தொடா்ந்து 88-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பிலும் தவறின்றி ஸ்கோா் செய்தாா்.

எஞ்சிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் பாா்த்துக் கொண்ட இந்தியா, இறுதியில் 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஒமங் டோடும் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.

குரூப் சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 28) மோதுகிறது. குரூப் பி-யில் இருந்து இந்தியா, வங்கதேசம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் வெளியேறிவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.