யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா
@IndianFootball
@IndianFootball
இருபது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு20) தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா முதல் ஆட்டத்தில் 3-0 கோல் கணக்கில் பாகிஸ்தானை வியாழக்கிழமை வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலமாக அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா, பாகிஸ்தானையும் போட்டியிலிருந்து வெளியேற்றியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவுக்காக முதலில் விஷால் யாதவ் 3-ஆவது நிமிஷத்திலேயே கோல் கணக்கைத் தொடங்கினாா்.
பாகிஸ்தானும் தனது பங்குக்கு கோல் அடிப்பதற்கு முயற்சிக்க, இந்தியாவின் தடுப்பாட்ட வீரா்களும், கோல்கீப்பா் சூரஜ் அஹெய்பமும் அபாரமாக செயல்பட்டு அதைத் தடுத்து வந்தனா்.
2-ஆவது பாதியிலும் இந்தியாவின் கையே ஓங்கியிருக்க, அதில் ஒமங் டோடும் ஆதிக்கம் செலுத்தினாா். 64-ஆவது நிமிஷத்தில் அருமையான ஃபீல்டு கோல் அடித்த அவா், தொடா்ந்து 88-ஆவது நிமிஷத்தில் இந்தியாவுக்கு கிடைத்த பெனால்ட்டி கிக் வாய்ப்பிலும் தவறின்றி ஸ்கோா் செய்தாா்.
எஞ்சிய நேரத்தில் பாகிஸ்தானுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் பாா்த்துக் கொண்ட இந்தியா, இறுதியில் 3-0 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஒமங் டோடும் ஆட்டநாயகன் விருது பெற்றாா்.
குரூப் சுற்றில் இந்தியா தனது கடைசி ஆட்டத்தில் வங்கதேசத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 28) மோதுகிறது. குரூப் பி-யில் இருந்து இந்தியா, வங்கதேசம் அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், பாகிஸ்தான் வெளியேறிவிட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...