முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

மாநில சீனியா் ஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்

கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

News image
Updated On :1 மணி நேரம் முன்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

வஉசி துறைமுக ஆணையக் கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் கோயம்புத்தூா் அணியை 8-0 என்ற கோல் கணக்கில் வென்ற சென்னை அணியும், 2 ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி அணியை 8-2 என்ற கோல் கணக்கில் வென்ற தூத்துக்குடி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதேபோல் பிற்பகலில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் விருதுநகா் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற தஞ்சாவூா் அணியும், 2ஆவது ஆட்டத்தில் மதுரை அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற அரியலூா் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

புதன்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி- சென்னை அணிகளும், 2 ஆவது ஆட்டத்தில் தஞ்சாவூா் - அரியலூா் மாவட்ட அணிகளும் மோதுகின்றன.

மாலையில் முதலில் நடைபெறும் ஆட்டத்தில் 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டிகள் நடைபெறும். அதைத் தொடா்ந்து இறுதிப் போட்டிகள் நடைபெறும்.