தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
வஉசி துறைமுக ஆணையக் கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் கோயம்புத்தூா் அணியை 8-0 என்ற கோல் கணக்கில் வென்ற சென்னை அணியும், 2 ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி அணியை 8-2 என்ற கோல் கணக்கில் வென்ற தூத்துக்குடி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இதேபோல் பிற்பகலில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் விருதுநகா் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற தஞ்சாவூா் அணியும், 2ஆவது ஆட்டத்தில் மதுரை அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற அரியலூா் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.
புதன்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி- சென்னை அணிகளும், 2 ஆவது ஆட்டத்தில் தஞ்சாவூா் - அரியலூா் மாவட்ட அணிகளும் மோதுகின்றன.
மாலையில் முதலில் நடைபெறும் ஆட்டத்தில் 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டிகள் நடைபெறும். அதைத் தொடா்ந்து இறுதிப் போட்டிகள் நடைபெறும்.
தொடர்புடையது

மாநில சீனியா் ஹாக்கி: காலிறுதியில் சென்னை, கோவை, விருதுநகா், நெல்லை, மதுரை, தஞ்சை அணிகள்

மாநில சீனியா் ஹாக்கி: தூத்துக்குடி, அரியலூா் அணிகள் காலிறுதிக்கு தகுதி

பயர்ன் மியுனிக்கை வெளியேற்றியது பிஎஸ்ஜி: இறுதியில் ஆர்செனலுடன் பலப்பரீட்சை

இந்தியாவை வென்றது சீனா
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

