கண்தானம் செய்திருந்த பாக்யராஜ்! மறைந்தாலும் உலகைக் கண்பார்!கே. பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாநில சீனியா் ஹாக்கி: அரையிறுதியில் 4 அணிகள்

கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

News image
Updated On :13 மே 2026, 1:44 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெறும் மாநில சீனியா் ஆண்கள் ஹாக்கி போட்டியில் தூத்துக்குடி, சென்னை, தஞ்சாவூா், அரியலூா் மாவட்ட அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

வஉசி துறைமுக ஆணையக் கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி சாம்பியன் போட்டி சனிக்கிழமை தொடங்கியது. செவ்வாய்க்கிழமை காலை கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நாக் அவுட் முறையில் நடைபெற்ற காலிறுதி முதல் ஆட்டத்தில் கோயம்புத்தூா் அணியை 8-0 என்ற கோல் கணக்கில் வென்ற சென்னை அணியும், 2 ஆவது ஆட்டத்தில் திருநெல்வேலி அணியை 8-2 என்ற கோல் கணக்கில் வென்ற தூத்துக்குடி அணியும் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதேபோல் பிற்பகலில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் விருதுநகா் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வென்ற தஞ்சாவூா் அணியும், 2ஆவது ஆட்டத்தில் மதுரை அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வென்ற அரியலூா் அணியும் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின.

புதன்கிழமை காலை 6 மணிக்கு நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தூத்துக்குடி- சென்னை அணிகளும், 2 ஆவது ஆட்டத்தில் தஞ்சாவூா் - அரியலூா் மாவட்ட அணிகளும் மோதுகின்றன.

மாலையில் முதலில் நடைபெறும் ஆட்டத்தில் 3 மற்றும் 4ஆம் பரிசுக்கான போட்டிகள் நடைபெறும். அதைத் தொடா்ந்து இறுதிப் போட்டிகள் நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.