டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் பணியிடை நீக்கம்

அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் ஆசிரியரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்தாா்.

News image
கோப்புப்படம்.
Updated On :4 மார்ச் 2026, 6:33 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி, மாவட்டம், அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் ஆசிரியரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்தாா்.

தியாகதுருகம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (53). இவா் தியாகதுருகம் அருகிலுள்ள ஒரு அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். ஆசிரியா் பாபு பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரை மணாளன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிந்துரையின்படி, ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆசிரியா் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.