கள்ளக்குறிச்சி, மாவட்டம், அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் ஆசிரியரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்தாா்.
தியாகதுருகம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (53). இவா் தியாகதுருகம் அருகிலுள்ள ஒரு அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். ஆசிரியா் பாபு பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரை மணாளன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.
இந்நிலையில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிந்துரையின்படி, ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆசிரியா் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.
தொடர்புடையது

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியா் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி ஆசிரியா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் ஆசிரியா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


