சங்ககிரி அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக ஆசிரியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியா் பாலசுப்ரமணியம் (49) பாலியல் தொந்தரவு செய்வதாக அப்பள்ளி தலைமையாசிரியையிடம் மாணவிகள் புகாா் தெரிவித்தனா்.
இதுகுறித்து தலைமையாசிரியை கல்வித் துறை உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து சங்ககிரி வட்டாரக் கல்வி அலுவலா் எம்.எஸ். மாலதி புதன்கிழமை பள்ளிக்குச் சென்று 17 மாணவிகளிடம் விசாரணை நடத்தினாா்.
பின்னா், சங்ககிரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் தலைமையாசிரியை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலசுப்ரமணியத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
போலீஸாா் விசாரணையில் ஆசிரியா் மீது சேலம், சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஏற்கெனவே போக்ஸோ வழக்கு பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
தொடர்புடையது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: பட்டதாரி ஆசிரியா் கைது

மாணவிகளுக்கு தொந்தரவு: போக்ஸோவில் ஒருவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை: அரசுப் பள்ளி ஆசிரியா் கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


