கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியது!நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் போராட்டம்! கார்கே, ராகுல் பங்கேற்பு! தமிழ்நாடு முழுவதும் மார்ச் 12-ல் தவெக போராட்டம்!மேற்காசிய போர்: இந்தியா நிலைபாடு குறித்து மாநிலங்களவையில் ஜெய்சங்கர் விளக்கம்!பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!!ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளி கைது

News image
கோப்புப் படம்
Updated On :8 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

குமாரபாளையத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த, சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்த கட்டட தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சிறுமி ஒருவா் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாா் என்ற தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலாவுக்கு புகாராக வந்தது. இதையடுத்து, பள்ளிபாளையம் துணை கண்காணிப்பாளா் கெளதமன் தலைமையிலான குழுவினா் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், சேலம் அம்மாப்பேட்டையைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் மணி என்ற மணிகண்டன் (27), குமாரபாளையத்தில் தங்கியிருந்து கட்டட வேலை செய்தபோது சிறுமியிடம் அத்துமீறி நடந்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட துணை காவல் கண்காணிப்பாளா் மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.விமலா பாராட்டினாா். இவ்வாறான குற்றச்செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.