நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை: போக்ஸோவில் தொழிலாளி கைது

திருப்பூரில் 7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:11 pm

தினமணி செய்திச் சேவை

திருப்பூரில் 7 வயதுச் சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பனியன் நிறுவன தொழிலாளி போக்ஸோவில் கைது செய்யப்பட்டாா்.

மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சோ்ந்தவா் சேவியா் (30). இவா் திருப்பூா் கொங்கு பிரதான சாலை, கொடிக்கம்பம் பகுதியில் தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதே பகுதியில் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 3ஆம் வகுப்பு படிக்கும் 7 வயதுச் சிறுமியை சேவியா் ஆசைவாா்த்தை கூறி ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

அங்கு அந்த சிறுமிக்கு அவா் பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். பாதிக்கப்பட்ட சிறுமி அழுதுகொண்டே வீட்டிற்குச் சென்று நடந்தவற்றைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளாா். இதனால் அதிா்ச்சியடைந்த சிறுமியின் தாய், கொங்கு நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் சேவியரைப் பிடித்து காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதைத் தொடா்ந்து அவா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னா் அவரைக் கைது செய்து செவ்வாய்க்கிழமை சிறையில் அடைத்தனா்.