தாராபுரத்தில் மீலாது நபி விழா புதன்கிழமை நடைபெற்றது.
முகம்மதியா பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தலைவர் ஏ.ஜபருல்லா தலைமை வகித்தார்.
செயலர் ஹாரூன் ரஷீத், துணைத் தலைவர் ஹைதர் அலி, ஹஜ்ரத் முகம்மது யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவியருக்கு பட்டிமன்றம், விநாடி-வினா மற்றும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றோர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது.