காங்கயம் அருகே அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கிறிஸ்தவ பிரார்த்தனைக் கூடத்தை அகற்ற வேண்டும் என காங்கயம் வட்டாட்சியரிடமும், காவல் நிலையத்திலும் இந்து முன்னணியினர் வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர்.
அந்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது :
காங்கயம் அருகே கணபதிபாளையத்தில் அரசு புறம்போக்கு நிலத்தில் மக்கள் நலவாழ்வு சேவை மையம் மற்றும் பிரார்த்தனை மையம் என்ற பெயரில் அக்கிரமிப்பு செய்து கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இங்கு, கிறிஸ்தவ நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இது சட்டத்துக்குப் புறம்பான செயலாகும். எனவே, உடனடியாக இந்தக் கட்டடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.