பாரதியார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான ஆடவர், மகளிர் ஹாக்கி போட்டிகள் உடுமலையில் டிசம்பர் 11ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
உடுமலை நேதாஜி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டிகளுக்கான ஏற்பாடுகளை வித்யா சாகர் கலை, அறிவியல் கல்லூரி செய்து வருகிறது. 11ஆம் தேதி பிற்பகல் 2 மணி அளவில் இப்போட்டிகளை மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.முத்துகுமார் தொடக்கிவைக்கிறார். இப்போட்டிகள் டிசம்பர் 15ஆம் தேதி வரை 4 நாளுக்கு நடைபெற உள்ளன. மகளிருக்கான ஹாக்கி போட்டிகளை சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் எஸ்.சௌந்திரராஜன் தொடக்கிவைக்கிறார். நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெறும் இந்தப் போட்டிகளில் 25க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்க உள்ளன. கல்லூரி உடற்கல்வி இயக்குநர் ஜெ.சண்முகராஜா உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.