வெள்ளக்கோவில் அருகே மது பானங்களைப் பதுக்கி விற்பனை செய்தவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
லக்கமநாயக்கன்பட்டியில் சட்ட விரோதமாக மது பானங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில் வெள்ளக்கோவில் போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அந்த ஊரைச் சேர்ந்த வேலுசாமி (52) என்பவரைப் பிடித்து, அவரிடமிருந்த 25 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்து, அவரைக் கைது செய்தனர்.