பனியன் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்கக் கோரிக்கை

பனியன் தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு  விதிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று திருப்பூர் பனியன்

பனியன் தொழில் சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு  விதிக்கப்பட்டுள்ள 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்ய வேண்டும் என்று திருப்பூர் பனியன் தையல் நிலைய உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 இதுகுறித்து சங்கத்தின் செயலாளர் கே.எஸ்.முருகேசன், மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது
 பனியன் தொழிலுக்கு என பிரத்யேகமாக திகழும் திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர், அவிநாசி, பல்லடம் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள பெண்கள், வீடுகளில் உள்நாட்டு பனியன் உற்பத்திக்குரிய பனியன் துணியை வெட்டி, தையல் நிலைய உரிமையாளர்களிடம் கூலிக்கு தைக்கக் கொடுக்கின்றனர். இதில், தையல் உரிமையாளர்களுக்கு கூலி மட்டுமே கிடைக்கிறது. இதன் மூலமாக குடும்பச் செலவுக்கு மட்டுமே வருமானம் கிடைக்கிறது.
 இந்நிலையில், இத்தொழிலுக்கு முதலில் நிர்ணயிக்கப்பட்ட 18 சதவீதம் சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) 5 சதவீதம் எனக் குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதையும், தையல் உரிமையாளர்களால் தர இயலாது.
 அதேபோல, ஸ்டீம் கேலண்டர், பிரிண்டிங், காஜா பட்டன், செக்கிங் சென்டர், அயர்ன், பேக்கிங் உள்ளிட்ட ஜாப் ஒர்க் பிரிவினரும் இந்த வரி விதிப்பால் பாதிக்கப்படுவர். எனவே, எங்களது கோரிக்கையை பரிசீலனை செய்து, ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட வரியைத் திரும்பப் பெற வேண்டும் என துணி முதல் ஆடை வரை உள்ள அனைத்து ஜாப் ஒர்க் நிறுவனங்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com