திருப்பூரில் ஒரு பகுதியில் நடைபெற்ற இருவேறு நகை பறிப்பு சம்பவங்கள் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியது:
திருப்பூர், பாரப்பாளையம், அய்யன் நகர் அருகேயுள்ள பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் அழகுசுந்தரம். இவரது மனைவி சத்யா ராகேஸ்வரி (22). கடந்த சனிக்கிழமை அதிகாலை அவர்களது வீட்டில் அனைவரும் உறக்கத்தில் இருந்துள்ளனர். அப்போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர், சத்யா ராகேஸ்வரி அணிந்திருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினார்.
திருப்பூர், ஆண்டிபாளையம், எஸ்.ஆர். நகர் தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (52). இவரது மகள் சிரேகா. இவர் இரு தினங்களுக்கு முன் அப்பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், திடீரென சிரேகா அணிந்திருந்த ஒன்றரைப் பவுன் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினார். இவ்விரு சம்பவங்கள் குறித்தும் திருப்பூர் மத்திய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.