தாராபுரம் துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை (மே 27) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் க.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: தாராபுரம் நகர், புறநகர், வீராட்சிமங்கலம், வெள்ளைகவுண்டன்வலசு, நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், கோவிந்தாபுரம், செலாம்பாளையம், தளவாய்பட்டிணம், நாட்டுக்கல்பாளையம், சென்னாக்கல்பாளையம், உப்பாறு அணை, அலங்கியம், வண்ணாபட்டி, திருமலைபாளையம், கொண்டரசம்பாளையம், பஞ்சப்பட்டி, பொன்னாபுரம், சின்னப்புத்தூர், பெரியபுத்தூர், சந்திராபுரம், சிக்கினாபுரம் பகுதிகள்.