உடுமலையில் மாற்றுத் திறனாளிகளுக்கான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மத்திய, மாநில மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீடு மற்றும் பயனாளிகள் கண்டறியும் இந்த முகாமை பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன் துவக்கி வைத்தார்.
முகாமில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களைச் சேர்ந்த 770 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். கோவை செஷயர் ஹோம்ஸ் மற்றும் உடுமலை ஜிவிஜி நிறுவனங்கள் முகாமை ஒருங்கிணைத்தன.
மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் முகாமுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.