இலங்கை யாழ்ப்பாணம் நூலகத்துக்கு ரூ. 10ஆயிரம் மதிப்புள்ள நூல்கள் பல்லடத்திலிருந்து செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
பல்லடம் கண்ணம்மாள் கிளை நூலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், டி.இ.எல்.சி. நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சசிகலா, யாழ்ப்பாணம் நூலகத்துக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள நூல்களை பல்லடம் கிளை நூலகர் ஜெயராஜிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பல்லடம் பாரத மாணவர் பேரவை மாநில அமைப்பாளர் அண்ணாதுரை, நூலகர் வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.