சாலை விரிவாக்கப் பணி: கொடுவாயில் கடைக்காரர்களுக்கு நோட்டீஸ்

பல்லடம் அருகே உள்ள கொடுவாயில் சாலை விரிவாக்கப் பணி சம்பந்தமாக கடைக்காரர்களுக்கு நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

பல்லடம் அருகே உள்ள கொடுவாயில் சாலை விரிவாக்கப் பணி சம்பந்தமாக கடைக்காரர்களுக்கு நெடுஞ்சாலை துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
கொடுவாயில் ஒட்டன்சத்திரம் - தாராபுரம் - திருப்பூர் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. பல்லடம் அருகே உள்ள தெற்கு அவிநாசிபாளையம் ஊராட்சி, கொடுவாய் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களுக்கு நெடுஞ்சாலைத் துறை சார்பில் நிலம் கையகப்படுத்துதல், அரசு நிலங்களில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், பாதிப்புக்குள்ளான ஆக்கிரமிப்புகளுக்கு இழப்பீடு வழங்குதல் குறித்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அது சம்பந்தமான ஆலோசனைக் கூட்டம் அக்டோபர் 10-ஆம் தேதி தாராபுரத்தில் உள்ள நெடுஞ்சாலைத் துறை பயணியர் விடுதியில் காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது. அதில் சம்பந்தப்பட்டவர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை தனி மாவட்ட வருவாய் அலுவலர் கி.சாந்தி அறிவுறுத்தினார். தொடர்ந்து கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com