பழைய சொட்டுநீர்ப் பாசனக் கட்டமைப்புகளை மானிய விலையில் புதுப்பித்துக்கொள்ள விவசாயிகளுக்கு பல்லடம் தோட்டக்கலை துறை அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து பல்லடம் தோட்டக்கலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிரதமரின் நுண்நீர்ப் பாசன அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 2017 - 18ஆம் ஆண்டுக்கான நிதியாக ரூ. 35 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க ஏற்கெனவே விண்ணப்பம் பெறப்படும் நிலையில் பல்லடம் வட்டாரம் முழுவதும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் நில உரிமைச் சான்று, சிட்டா, அடங்கல் (கிணற்றுடன்), நில வரைபடம், கூட்டு வரைபடம், ஆதார் அட்டை, ரேஷன் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு 3 புகைப்படங்கள், நீர் மற்றும் மண் மாதிரி முடிவு அறிக்கை, வட்டாட்சியர் அளித்த சிறு, குறு விவசாயிச் சான்று ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ளலாம். சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து 7ஆண்டுகள் முடிந்த விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.
மேற்கூறிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பழைய சொட்டுநீர்ப் பாசன கட்டமைப்புகளையும் மானிய விலையில் மாற்றி கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.