அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம்

காங்கயம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு,  தாராபுரம் உதவி ஆட்சியர் கிரேஸ் பச்சாவு தலைமை வகித்தார். இதில் அரசு மருத்துவமனை மருத்துவர் பூங்கொடி மற்றும் செவிலியர் கலந்து கொண்டனர். 
இதில் மருத்துவமனையில் உள்ள ஜெனரேட்டருக்கு டீசல் வழங்க வேண்டும்,  கூடுதலாக துப்புரவுப் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும்,  மருத்துவமனை சுவர்களுக்கு வெள்ளையடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்தக் கோரிக்கைகள் மீதான நடவடிக்கை எடுக்க ஆவன செய்வதாக உதவி ஆட்சியர் கிரேஸ் பச்சாவு உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com